Sulabha arya biography tamil
சுலபா ஆர்யா
சுலபா ஆர்யா | |
|---|---|
ஆர்யா 2013-இல் | |
| பிறப்பு | 15 சூலை 1950 (1950-07-15) (அகவை 74)[1] |
| மற்ற பெயர்கள் | ஆர்யா |
| பணி | நடிகை |
| அறியப்படுவது | குணச்சித்திர நடிகை |
| வாழ்க்கைத் துணை | இசான் ஆர்யா (இற. 1996) |
| பிள்ளைகள் | 2 |
| உறவினர்கள் | ரமேஷ் பெஹ்லா (மருமகள்)[2] |
சுலபா ஆர்யா (Sulabha Arya, பிறப்பு:15 சூலை 1950) இந்தி, மராத்தி திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நாடகத் துறையிலும் பணியாற்றும் இந்திய நடிகையாவார். இவர் மறைந்த மூத்த இந்திய ஒளிப்பதிவாளர் இசான் ஆரியாவின் மனைவியும், ஒளிப்பதிவாளர் சமீர் ஆர்யா, நடிகர் சாகர் ஆரியாவின் தாயுமாவார்.[3]சசுரல் கெண்டா பூல் படத்தில் சாந்தி மாசி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர். சியாம் பெனகலின் அமராவதி கி கதையேன் படத்திலும் இலட்சுமம்மாவாக இவர் நடித்தார்.
நடிப்புத் தொழில்
[தொகு]ஆர்யா 1984இல் ஒளிபரப்பான இந்தியத் தொலைக்காட்சித் துறையின் முதல் சூழ்நிலை நகைச்சுவை நிகழ்ச்சியான யே ஜோ ஹை ஜிந்தகியின் நடிகைகளுள் ஒருவராக இருந்தார்.[4] 2003ஆம் ஆண்